“கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அஞ்ச வேண்டாம்…மன வலிமையோடு எதிர்கொள்ள வேண்டும்” – கொரோனாவில் இருந்து மீண்ட இளைஞர்

 

“கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அஞ்ச வேண்டாம்…மன வலிமையோடு எதிர்கொள்ள வேண்டும்” – கொரோனாவில் இருந்து மீண்ட இளைஞர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டால் மன வலிமையோடு எதிர்கொள்ள வேண்டும் என அந்நோயில் இருந்து மீண்ட இளைஞர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை: கொரோனாவால் பாதிக்கப்பட்டால் மன வலிமையோடு எதிர்கொள்ள வேண்டும் என அந்நோயில் இருந்து மீண்ட இளைஞர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அகமதுல்லா என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 19 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் கொரோனா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்து உள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அதற்காக அச்சப்பட வேண்டாம். மன வலிமையோடு அதை எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்டவுடன் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன். சிகிச்சை, கண்காணிப்பு அனைத்தும் மருத்துவர்கள் நன்றாக செய்தார்கள். தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பயப்படும் விதமாக கொரோனா வார்டில் எதுவும் இல்லை. மருத்துவர்கள் நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். மற்ற நோய்களை போன்று தான் கொரோனாவும். நாம் நேர்மறை சிந்தனையுடன் இருந்தால் அந்நோயில் இருந்து விடுபடலாம் என்றார்.