கொரோனாவால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 69 ஆயிரத்தை தாண்டியது!

 

கொரோனாவால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 69 ஆயிரத்தை தாண்டியது!

ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

 கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

 

இதுவரை உலகம் முழுவதும் 12 லட்சத்து 73 ஆயிரத்து 794 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.  

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர்  எண்ணிக்கை 69 ஆயிரத்தை தாண்டியது.  இதுவரை 69,419 பேர் பலியாகி  உள்ளனர் .  இதன் மூலம் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை அடுத்தகட்டத்தை நெருங்குகிறது.