கொரோனாவால் அமெரிக்காவில் 11 இந்தியர்கள் உயிரிழப்பு

 

கொரோனாவால் அமெரிக்காவில் 11 இந்தியர்கள் உயிரிழப்பு

கொரோனா தொற்று வைரஸ் காரணமாக அமெரிக்காவில் 11 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

வாஷிங்டன்: கொரோனா தொற்று வைரஸ் காரணமாக அமெரிக்காவில் 11 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

அமெரிக்கா நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14795-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் இத்தாலி, ஸ்பெயினுக்கு அடுத்து 3-வது இடத்தில் அமெரிக்கா உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் நாட்டில் 1900க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதுவரை கொரோனாவால் 435,128 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 22,891 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.

ttn

இந்த நிலையில், கொரோனா தொற்று வைரஸ் காரணமாக அமெரிக்காவில் 11 இந்தியர்கள் உயிரிழந்தனர். அமெரிக்காவில் கொடிய நோய்த்தொற்றுக்கு ஆளான அனைத்து இந்திய குடிமக்களும் ஆண்களே ஆவார்கள். அவர்களில் பத்து பேர் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பலியானவர்களில் 4 பேர் நியூயார்க் நகரில் டாக்ஸி ஓட்டுநர்கள் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா முழுவதும் உள்ள இந்திய தூதரகம் மற்றும் தூதரகங்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து அதன் குடிமக்களுக்கும் கொரோனாவால் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றன.