“கொரானா தாக்கி, சங்கு ஊதி, மேளம் தட்டி” பைக்கில் வந்தவரை பயம் காட்டிய பெங்களூரு போலீஸ்..
நேற்று காலையில் ஒரு இளைஞர் ஊரடங்கு உத்தரவினை மீறி பைக்கில் வந்தார் .அந்த இளைஞருக்கு பாடம் புகட்ட நினைத்த பெங்களூரு போக்குவரத்து போலீசார் ,ஓரமாக ஒளிந்திருந்து அந்த இளைஞரை மடக்கி பிடித்தனர் .பிறகு அந்த இளைஞரின் தலையில் கொரானா போன்ற ஒரு கிரீடத்தினை அணிவித்து ,மேளம் தட்டி ,சங்கு ஊதி அவரின் பின்னால் அமர்ந்து கொண்டு ஊர்வலம் போனார்கள்.
பெங்களூருவில் நேற்று காலையில் போக்குவரத்து போலீசுக்கும் பைக்கில் வந்தவருக்குமிடையே நடந்த ஒரு நூதன சம்பவ வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது .
நேற்று காலையில் ஒரு இளைஞர் ஊரடங்கு உத்தரவினை மீறி பைக்கில் வந்தார். அந்த இளைஞருக்கு பாடம் புகட்ட நினைத்த பெங்களூரு போக்குவரத்து போலீசார் ,ஓரமாக ஒளிந்திருந்து அந்த இளைஞரை மடக்கி பிடித்தனர் .பிறகு அந்த இளைஞரின் தலையில் கொரானா போன்ற ஒரு கிரீடத்தினை அணிவித்து ,மேளம் தட்டி ,சங்கு ஊதி அவரின் பின்னால் அமர்ந்து கொண்டு ஊர்வலம் போனார்கள்.
இதன் மூலம் அந்த இளைஞருக்கு அவர்கள்என்ன சொல்கிறார்கள் என்றால் இப்படி வீட்டை விட்டு வெளியே வந்தால் கொரானா தாக்கி உயிர் போய்விடும் என்று அவருக்கு உணர்த்தினார்கள் .மக்களுக்கு எப்படியாவது விழிப்புணர்வு வரவேண்டுமென்று போலீசார் பல வழிகளை பின்பற்றி போராடுகிறார்கள் .ஆனால் பலர் திருந்துவதாக தெரியவில்லை .கொரானா விஷயத்தில் ரொம்ப அலட்சியமாக மக்கள் இருப்பதாக போலீசார் தெரிவித்தார்கள்.