“கொரானா காலத்திலும் ரெண்டு கல்யாணம் பண்ணிக்கிட்டியே..” -ஒரு வாத்தியார் பண்ண பலான வேலைகள் .

 

“கொரானா காலத்திலும் ரெண்டு கல்யாணம் பண்ணிக்கிட்டியே..” -ஒரு வாத்தியார் பண்ண பலான வேலைகள் .

ஒரு அரசு பள்ளி ஆசிரியர் முறையாக விவகாரத்து பெறாமல் நான்கு திருமணம் செய்து கொண்டதால் அவர் கைது செய்யப்பட்டார் .

“கொரானா காலத்திலும் ரெண்டு கல்யாணம் பண்ணிக்கிட்டியே..” -ஒரு வாத்தியார் பண்ண பலான வேலைகள் .

ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள மஹிலா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 45 வயதான நபர் ஒருவர் ஆசிரியராக பணிபுரிகிறார் .இந்த  ஆசிரியர் 2001 இல் முதல் முறையாக திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு  எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவதாக மறுமணம் செய்து கொண்டார்.அதன் பின்பு மூன்றாண்டுகளுக்கு முன்பு அவரை விட்டும் விலகினார் .

இந்நிலையில் கொரானா வைரஸ் நாட்டில் பரவிய 2020ம் ஆண்டில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நேரத்தில் இரண்டு திருமணம் செய்து கொண்டு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தார் .ஆனால் அவர் செய்து கொண்ட ஒவ்வொரு திருமணமும் மற்ற மனைவிகளுக்கு தெரியாமல் சமாளித்து வந்துள்ளார் .

ஆனால் ஊரடங்கு நேரத்தில் அவர் செய்து கொண்ட இரு திருமணமும் அவரின் முதல் மற்றும் இரண்டாவது மனைவிகளுக்கு சமீபத்தில் தெரிய வந்துள்ளது .அதனால் கடுமையான கோபமடைந்த அவர்கள் இருவரும் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த ஆசிரியர் மீது புகாரளித்தார்கள் .இதனால் போலீசார் அந்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள் .அப்போது அந்த ஆசிரியரின் மோசடி திருமண குட்டு வெளிப்பட்டது .மேலும் கடந்த ஜனவரி மாதமே அவரின் முதல் மனைவி அந்த ஆசிரியர் மீது அளித்த புகாரில் அவர் மீது விசாரணை நடந்து வந்தது . அதன் காரணமாக அந்த ஆசிரியர் மீது திருமண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது .பிறகு அவரை போலீசார் கைது செய்தார்கள் .

“கொரானா காலத்திலும் ரெண்டு கல்யாணம் பண்ணிக்கிட்டியே..” -ஒரு வாத்தியார் பண்ண பலான வேலைகள் .