‘கொரானாவுக்கு தப்பித்து விபத்தில் பலியானார்கள்”-ஊரடங்கால் ஊருக்கு திரும்பிய 6 பேர் பலி.

 

‘கொரானாவுக்கு தப்பித்து விபத்தில் பலியானார்கள்”-ஊரடங்கால் ஊருக்கு திரும்பிய 6 பேர் பலி.

ஹைதராபாத் புறநகரில் உள்ள அவுட்டர் ரிங் சாலையில் சனிக்கிழமை அதிகாலை கர்நாடகாவில் தொழிலாளர்களை தங்கள் கிராமங்களுக்கு ஏற்றிச் சென்ற டிரக்  ஒன்று லாரி மீது மோதியதில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

ஹைதராபாத் புறநகரில் உள்ள அவுட்டர் ரிங் சாலையில் சனிக்கிழமை அதிகாலை கர்நாடகாவில் தொழிலாளர்களை தங்கள் கிராமங்களுக்கு ஏற்றிச் சென்ற டிரக்  ஒன்று லாரி மீது மோதியதில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

கர்நாடகாவின் ரைச்சூர் மாவட்டத்தில் உள்ள 30 தொழிலாளர்கள், ஊரடங்கால்  வேலையில்லாமல், தங்கள் கிராமங்களுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர்  6 பேர் காயமடைந்தனர்.ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பெடா கோல்கொண்டா கிராமத்திற்கு அருகே தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ட்ரக் மீது  பின்னால் இருந்து மற்றொரு லாரி மீது மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.

இறந்தவர்களில் லாரி ஓட்டுநரும் ஒரு சிறுமியும் அடங்குவர். ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், ஒரு பெண் அரசாங்க உஸ்மானியா மருத்துவமனையில் இறந்தார். காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.