“கொரானாவால் உன் குடுமி என் கையில்” மனைவியிடம் முடி வெட்டிக்கொள்ளும் விராட் கோலி…
நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஆகியோர் கொரோனா வைரஸ் ஊரடங்குக்கிடையே தங்களின் வீட்டில் நேரத்தை செலவிடுகிறார்கள். . சனிக்கிழமையன்று, அனுஷ்கா வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு மத்தியில் கணவர் விராட்டுக்கு சிகையலங்கார நிபுணராக மாறிய ஒரு வீடியோவை வெளியிட்டார்.
கொரானா வைரசால் ஏற்பட்ட ஊரடங்கின் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் அனுஷ்கா ஷர்மா தன்னுடைய கணவர் விராட் கோலிக்கு சமையலறை கத்தரிக்கோலால் முடி வெட்டினார்.
நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஆகியோர் கொரோனா வைரஸ் ஊரடங்குக்கிடையே தங்களின் வீட்டில் நேரத்தை செலவிடுகிறார்கள். . சனிக்கிழமையன்று, அனுஷ்கா வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு மத்தியில் கணவர் விராட்டுக்கு சிகையலங்கார நிபுணராக மாறிய ஒரு வீடியோவை வெளியிட்டார்.
இன்ஸ்டாகிராமில் அனுஷ்கா அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் விராட்டுக்கு அனுஷ்கா ஒரு ஹேர்ஸ்டைலிஸ்டாக மாறியதை நாம் காணலாம். விராத் கேமராவைப் பிடித்துக்கொண்டிருக்கும்போது , அனுஷ்கா அவருக்கு சமையலறை கத்தரிக்கோலால் ஹேர்கட் செய்வதை காணலாம். ஆனால் விராட் கோலி அப்போது தயக்கத்துடன் காணப்படுகிறார், ஆனால் கணவரின் தலைமுடியை வெட்டும்போது அனுஷ்கா ஒரு மகிழ்ச்சியுடன் அந்த நேரத்தை அனுபவிப்பதாக தெரிகிறது. இந்த அந்நியோன்ய தம்பதியினர் இந்த ஊரடங்கு காலத்தை அதிகம் பயன்படுத்தி , வீட்டில் அதிக நேரத்தை செலவிடுவதாக தெரிகிறது.