கொத்துக் கொத்தாக தூக்கத் துடிக்கும் எடப்பாடி… வெத்துக் கெத்தாக நடிக்கும் டி.டி.வி.தினகரன்..!

 

கொத்துக் கொத்தாக தூக்கத் துடிக்கும் எடப்பாடி… வெத்துக் கெத்தாக நடிக்கும் டி.டி.வி.தினகரன்..!

தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என தனக்குத் தானே கெத்தாக தெம்பூட்டிக் கொள்வார். அந்தக் கெத்து மட்டும் கூட இருந்தால் போதும் பாஸ்… வேற எதுவும் வேண்டாம்.

மக்களவை தேர்தலுக்கு பின்னர் டி.டி.வி.தினகரன் அமமுகவில்  உள்ளவர்களை அதிமுகவுக்கு இழுக்க அக்கட்சியின்  தலைமை படுவேகம் காட்டியது. அதில் முதலில் கைகொடுத்தது நெல்லை. அங்கு டி.டி.வி.தினகரன்  கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் 3 பேரும் கூண்டோடு விலகி அதிமுகவில் ஐக்கியமாகி விட்டார்கள். அதில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவும் ஒருவர். ttv

 அதனால்தான் தென்காசியில் நடந்த இணைப்பு விழாவிற்கு ஓ.பி.எஸ்- எடப்பாடியும் நேரில் சென்றார்கள். நெல்லை மாவட்டத்திற்கு அடுத்தடுத்து 2 விசிட் அடித்த எடப்பாடி பழனிசாமி,  அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தை கையில் எடுத்துள்ளாராம். அங்கு இருப்பவர்களை அதிமுகவில் இணைக்க தனி அசைன்மென்ட் கொடுத்துள்ளாராம். eps

நெல்லைக்கு வந்து விட்டு தூத்துக்குடி சென்று தங்கியதன் ரகசியம் இது தானாம். இரவு கட்சியின் முக்கிய பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியவர் டி.டி.வி.தினகரன் கட்சியை கூண்டோடு காலி செய்ய வேண்டும். அப்போதுதான் சட்டசபை தேர்தலில் நமக்கு எந்த பங்கமும் வராது என்றாராம். அதைக் கேட்ட ரத்தத்தின் ரத்தங்கள் உற்சாகமாகி விட்டார்கள். இப்போது முத்துநகரில் ஆள்பிடிக்கும் வேலையில் மூழ்கத் தொடங்கி விட்டார்கள் அதிமுக அடிப்பொடிகள். ttv dhinakaran

ஆனாலும் நம்ம டி.டி.வி.தினகரன் அதெற்கெல்லாம் சளைத்தவரா? நிர்வாகிகள் மட்டும்தான் விலகிப் போகிறார்கள். தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என தனக்குத் தானே கெத்தாக தெம்பூட்டிக் கொள்வார். அந்தக் கெத்து மட்டும் கூட இருந்தால் போதும் பாஸ்… வேற எதுவும் வேண்டாம்.