கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுடும் 87 வயது மூதாட்டி…40 நாட்கள் கடும் விரதம் இருக்க வேண்டுமாம்!

 

கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுடும் 87 வயது மூதாட்டி…40 நாட்கள் கடும் விரதம் இருக்க வேண்டுமாம்!

மூதாட்டி ஒருவர் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பத்தை சுடும் வினோதம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அரங்கேறியுள்ளது. 

விருதுநகர் : மகாசிவராத்திரியை முன்னிட்டு மூதாட்டி ஒருவர் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பத்தை சுடும் வினோதம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அரங்கேறியுள்ளது. 

ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலியார் பட்டித் தெருவில் பத்ரகாளியம்மன் கோவிலில் மகாசிவராத்திரி நாளில் கடந்த 100 ஆண்டுகளாக விறகு அடுப்பில் நெய்யில் அப்பம் சுட்டு அதை கரண்டியில் எடுக்காமல் கைகளாலேயே எடுக்கும் நிகழ்வு  நடந்து வருகிறது. 

ttn

அந்த வகையில் நேற்று முத்தம்மாள் என்ற 87 வயது மூதாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் சுந்தர மகாலிங்கம், கணேசன், இருளப்பன் ஆகியோர் இதை மேற்கொண்டுள்ளனர். அதாவது எரியும் விறகு அடுப்பில் நெய்யை கொதிக்கவிட்டு அதில் பருப்பு, வெல்லம் கலந்த உருண்டையை அரிசி மாவில் தோய்த்து  போட்டனர். பின்னர் அப்பத்தை வெறும் கைகளாலேயே எடுத்தனர். இது பார்ப்போரை ஆச்சரியப்படுத்தியது.

ttn

பின்னர் அதை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது. முத்தம்மாள்  கடந்த 49 ஆண்டுகளாக மகா சிவராத்திரி நாளில் அப்பம் சுட்டு வருகிறார். இதற்காக அவர் 40 நாட்களாக விரதம் இருப்பது குறிப்பிடத்தக்கது.