கொதிக்கும் சாம்பார் அண்டாவில் விழுந்த சிறுவன்: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்!

 

கொதிக்கும் சாம்பார் அண்டாவில் விழுந்த சிறுவன்: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்!

மதிய  உணவு இடைவெளியில் உணவிற்காக வரிசையில் மாணவர்கள் நிற்க சிறுவனும் வரிசையில் நின்றுள்ளான்

ஆந்திரா: யுகேஜி படிக்கும் சிறுவன்  சாம்பார் அண்டாவுக்குள் தவறுதலாக விழுந்து பலியான   சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

child

ஆந்திராவின் கர்னூல் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஹாஸ்டலில் தங்கி  சிறுவன்  ஒருவன் யுகேஜி படித்து வந்துள்ளது. மதிய  உணவு இடைவெளியில் உணவிற்காக வரிசையில் மாணவர்கள் நிற்க சிறுவனும் வரிசையில் நின்றுள்ளான். அப்போது சூடாக கொதிக்கக் கொதிக்க இருந்த சாம்பார் அண்டாவை  பணியாளர்கள் கொண்டு வந்து வைத்துள்ளனர்.

sambar

இதையடுத்து சிறுவன் அந்த சாம்பார் அண்டாவுக்குள் நொடி பொழுதில் தவறி விழுந்துள்ளான்.  இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர்  சிறுவனை  மீட்டு அருகிலிருந்த கர்னூல் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி சிறுவன் பரிதாபமாகப் பலியானான். இதுகுறித்து போலீசார் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.