கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கணவனை கொன்ற மனைவி…சென்னையில் பரபரப்பு!

 

கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கணவனை கொன்ற மனைவி…சென்னையில் பரபரப்பு!

கடந்த 2 ஆம் தேதி கணவன் மனைவிக்கு இடையே  மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

சென்னை திருவிக நகரின் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் உபயதுல்லா. இவருடைய மனைவி நஸ்ரின். கணவன் மனைவி இவருக்குமிடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன்படி கடந்த 2 ஆம் தேதி கணவன் மனைவிக்கு இடையே  மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

HUSBAND

இதில் ஆத்திரமடைந்த  நஸ்ரின் அடுப்பில் எண்ணெய்யைச் சூடாக்கி பின்னர், கொதிக்கும் எண்ணெய்யை  எடுத்து கணவன் உபயதுல்லா மீது ஊற்றியுள்ளார். இதில் அலறித்துடித்த  உபயதுல்லா, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

TTN

இந்நிலையில்  உபயதுல்லா சிகிச்சை பலனின்றி   பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த  திருவிக நகர் போலீசார்,  உபயதுல்லா  மனைவி நஸ்ரினை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.