கொண்டாடலாம்… ஆனால் இதெல்லாம் கூடாது! – கட்டுப்பாடு விதித்த அரவிந்த் கெஜ்ரிவால்

 

கொண்டாடலாம்… ஆனால் இதெல்லாம் கூடாது! – கட்டுப்பாடு விதித்த அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதைக் கட்சித் தொண்டர்கள் கொண்டாட அரவிந்த் கெஜ்ரிவால் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
டெல்லியில் மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். 56 இடங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதைக் கட்சித் தொண்டர்கள் கொண்டாட அரவிந்த் கெஜ்ரிவால் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
டெல்லியில் மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். 56 இடங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது. சில தொகுதிகளில் 100க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே ஆம் ஆத்மி வேட்பாளர்கள் பின்தங்கியுள்ளனர். இதனால் 60 இடங்களில் ஆம் ஆத்மி வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

aam-aadmi-party

இந்த நிலையில் காலையிலிருந்தே ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் குவிந்து வருகின்றனர். முன்னிலை செய்தி வரவர உற்சாகம் மிகுதியில் தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். டெல்லியில் எந்த பகுதியிலும் பட்டாசு வெடிக்கக் கூடாது, அமைதியான முறையில் எளிமையாகக் கொண்டாட வேண்டும் என்று கூறியுள்ளார். இதை சமூக ஊடகங்களில் பலரும் வரவேற்று வருகின்றனர்.