கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்கும்… அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி!

 

கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்கும்… அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி!

அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி!
நியூயார்க்கில் உள்ள ‘டான்பரி’ பகுதியில் பொதுமக்கள் எல்லோருக்கும் அன்றைய தினம் வழக்கம்போல விடிந்திருக்கிறது.இரண்டு பேருக்கு மட்டும் அன்றைக்கு நேரம் ரொம்ப சுமாராத்தான் இருக்கும் என்பது தெரிய வந்தபோது அதிர்ந்துதான் போயிருக்கிறார்கள்.

கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்கும்… அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி!
நியூயார்க்கில் உள்ள ‘டான்பரி’ பகுதியில் பொதுமக்கள் எல்லோருக்கும் அன்றைய தினம் வழக்கம்போல விடிந்திருக்கிறது.இரண்டு பேருக்கு மட்டும் அன்றைக்கு நேரம் ரொம்ப சுமாராத்தான் இருக்கும் என்பது தெரிய வந்தபோது அதிர்ந்துதான் போயிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி!

அங்கிருந்த ஒரு வீட்டின் உரிமையாளரான பெண்ணும் அவரது இரண்டு மகள்களும் வீட்டிற்குள் வெவ்வேறு வேளைகளில் இருந்திருக்கிறார்கள். அப்போது  வீட்டின் மேற்கூரையின் மீது ‘டமால்’ என்று வெடிகுண்டு வெடித்ததுபோல் பலத்த  சப்தம் கேட்டு மூன்று பேரும் அலறியடித்தபடி வீட்டுக்கு  வெளியே ஒடி வந்திருக்கிறார்கள்.இவர்கள் வந்த அதே வேகத்துக்கு அந்த தெருவில் இருந்த அத்தனை பேரும் வெளியே ஓடி வந்திருக்கிறார்கள்.
அப்போதுதான் தெரிந்திருக்கிறது…ஒரு குட்டி விமானம் ஒன்று இவர்கள் வீட்டு கூரையைக் கிழித்துக்கொண்டு நின்றிருக்கிறது.கொஞ்சமும் தாமதிக்காமல் கூரைமீது ஏறி, காயத்தோடு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பைலட்டை மீட்டு வீட்டின் உரிமையாளரும் அவரது மகள்களும் சேர்ந்து மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி!

தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார்,முதல் கட்ட விசாரணையில் விமானத்தின் பேட்டரி தீர்ந்ததால் இந்த விபத்து நடந்திருக்கக்கூடும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.கிரேன் மூலம் விமானத்தை கூரையிலிருந்து அகற்றியிருக்கிறார்கள்.பைலட்டிடம் விசாரித்த பிறகே விபத்துக்கான முழு விபரமும் தெரிய வருமாம்.
கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டு கொடுக்கும்னு சொல்வாங்க… இவங்களுக்கு இப்படிக் கொடுத்திருப்பதில் அதிர்ச்சி விலகாமலே இருக்கு அந்தக் குடும்பம்.