கொடநாடு விவகாரத்தை தனிக்குழு விசாரிக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

 

கொடநாடு விவகாரத்தை தனிக்குழு விசாரிக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சிலை கடத்தல் வழக்கை போல் கொடநாடு விவகாரத்திலும் தனிக்குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

திருவாரூர்: சிலை கடத்தல் வழக்கை போல் கொடநாடு விவகாரத்திலும் தனிக்குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கொடநாடு விவகாரம் தொடர்பாக பேசுகையில், கொடநாடு கொலை விவகாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும். கொடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு விவரங்களை கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் 5 பேர் இறந்துள்ளனர். இந்த இறப்பில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து முதல்வர் பெயர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழக முதல்வருக்கு பயம், பதட்டம் உள்ளது தெரிகிறது. கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் தமிழக காவல்துறையினர் கைது செய்து வந்தவர்களை நீதிபதி சிறைக்கு அனுப்ப மறுத்துள்ளது முதல்வருக்கு மிகப்பெரிய பின்னடைவு. சிலை கடத்தல் தொடர்பான வழக்கை தனிக்குழு விசாரிப்பது போல் இந்த விவகாரத்திலும் தனிக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றார்.