கொடநாடு விவகாரத்தில் முதல்வர் பதில் கூறியே ஆக வேண்டும்: கமல்ஹாசன் காட்டம்

 

கொடநாடு விவகாரத்தில் முதல்வர் பதில் கூறியே ஆக வேண்டும்: கமல்ஹாசன் காட்டம்

கொடநாடு விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் கூறியே ஆக வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை: கொடநாடு விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் கூறியே ஆக வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களா தொடர்பாக நடைபெற்ற அடுத்தடுத்த மரணங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக, வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான் என்பவர், புலனாய்வு பத்திரிகையாளர் மேத்யூ சாமுயலிடம் வாக்குமூலம் அளித்தார். 

eps

அந்த வீடியோவை உள்ளடக்கிய ஆவணப்படம் ஒன்றை தயாரித்த பத்திரிகையாளர் மேத்யூ, அதை செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிடவும் செய்தார். இதனையடுத்து, தமிழக அரசியலில் பெரும் சர்ச்சைகள் உருவாகத் தொடங்கின. 

இந்த விவகாரத்தில் சிபிஐ அல்லது, சிறப்பு புலனாய்வு குழு விசாரணை வேண்டும் என தமிழக ஆளுநரை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

kamal

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கோடநாடு விவகாரம் மர்ம தொடர்கதையின் அடுத்த அத்தியாயம் என்றும், அதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் கூறினார்.

மேலும், கொடநாடு விவகாரத்தில் முதல்வர் பதவி விலகி, நேர்மையான விசாரணைக்கு வழி வகுக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.