கொடநாடு விவகாரத்தில் தீபாவின் சந்தேகம் யார் மீது தெரியுமா?

 

கொடநாடு விவகாரத்தில் தீபாவின் சந்தேகம் யார் மீது தெரியுமா?

கொடநாடு விவகாரத்தில் சசிகலா குடும்பத்தின் மீதுதான் சந்தேகம் இருப்பதாக ஜெ தீபா கூறியுள்ளார்.

சென்னை: கொடநாடு விவகாரத்தில் சசிகலா குடும்பத்தின் மீதுதான் சந்தேகம் இருப்பதாக ஜெ தீபா கூறியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் கொள்ளை சம்பவத்தின் முக்கிய சாட்சியாக கருதப்படும் சயன், தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸிடம் அளித்த வீடியோ வாக்குமூலத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாகக் கூறியிருந்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா இவ்விவகாரம் குறித்து பேசுகையில், கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் சசிகலா குடும்பம் மீது தான் சந்தேகம் உள்ளது என்றார். மேலும், அதிமுகவுடன் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.