கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக: முதல்வர் ஈபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு

 

கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக: முதல்வர் ஈபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு

கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக இருப்பதாக முதல்வர் பழனிசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். 

சென்னை: கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக இருப்பதாக முதல்வர் பழனிசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். 

இந்த மரணங்களுக்குப் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக, வழக்கின் முக்கிய சாட்சியான சயன் என்பவர், டெல்லியைச் சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலிடம் வாக்குமூலம் அளித்தார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையாகப் பேசப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சென்னை காட்டுப்பாக்கத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கொடநாடு விவகாரம் தொடர்பான வழக்குகளில் திமுக வழக்கறிஞர்கள் ஆஜராவதாகவும், இந்த விவகாரத்தின் பின்னணியில் திமுக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், எதற்கும் அஞ்ச மாட்டேன் என்றும், இறுதி சொட்டு ரத்தம் உள்ளவரை அதிமுகவிற்கு விசுவாசமாக இருப்பேன் என்றும் முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.