கொடநாடு பங்களா, கோடி கோடியாய் பணம்: தேர்தல் ஆணையத்துக்கு ஆப்படித்த ஜெபமணி மோகன்ராஜ்

 

கொடநாடு பங்களா, கோடி கோடியாய் பணம்: தேர்தல் ஆணையத்துக்கு ஆப்படித்த ஜெபமணி மோகன்ராஜ்

பச்சை மிளகாய் சின்னத்தை ஜெபமணி மோகன்ராஜுக்கு வழங்கிவிட்டு, தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள பொது மக்கள் கண்ணில் பச்சை மிளகாய் வைக்கப்பட்டிருக்கிறது.

ஜெபமணி ஜனதா கட்சியை நடத்தி வந்த நெல்லை ஜெபமணியின் மகன் மோகன்ராஜ், தேர்தல் ஆணையத்தின் உண்மை முகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்.

ஜெபமணி

இவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட அளித்த உறுதிச் சான்று அதிர்ச்சியை அளித்துள்ளது. அதன்மூலம் தேர்தல் ஆணையத்துக்கு வலுவான ஆப்படித்திருக்கிறார்.

ஜெபமணி

பெரம்பூர் சட்டசபை இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம் காண விரும்பிய ஜெபமணி மோகன்ராஜ், உயர்நீதிமன்ற நோட்டரி பப்ளிக்கிடம் உறுதிச்சான்று பெற்றுள்ளார். அதனை தேர்தல் ஆணையம் ஏற்று அவருக்கு பச்சை மிளகாய் சின்னம் ஒதுக்கியதுள்ளது. இதில் என்ன தேர்தல் ஆணையத்துக்கு ஆப்பு என்ற கேள்வி எழுகிறதா, அவர் பெற்ற உறுதிச் சான்றில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை பார்த்தால் தலை சுத்திவிடும். ஆனால் இதை நோட்டரி பப்ளிக்கும், தேர்தல் ஆணையமும் எப்படி அனுமதித்தது என்று தெரியவில்லை.

ஜெபா

ஜெபமணி மோகன்ராஜ் தன்னிடம் கொடநாடில் 4 பங்களா இருப்பதாகவும்,  ரூ. 1.76 லட்சம் கோடி ரொக்க பணம் இருப்பதாகவும் உறுதிச் சான்று பெற்றுள்ளார். அதுமட்டுமல்ல அவருக்கு உலக வங்கியில் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெபா

இந்த அதிர்ச்சிகரமான பொய் பட்டியலில் அவர் மனைவி ஆனந்தியிடம் 20,000 ரூபாயும், 13 பவுன் நகை மட்டுமே உள்ளதென குறிப்பிட்டுள்ளார். அதை மட்டும் ஏன் குறைவாக சொல்லனும், 4 நகைக் கடை வச்சிருக்கதா சொல்லிருக்கலாம் என்ற வருத்தம் வராமலில்லை.

ஜெபா

தற்போது பிரச்னை இதுதான், சின்ன சின்ன தவறுகளை சுட்டிக்காட்டி வேட்பாளர் மனுவை நிராகரிக்கும் தேர்தல் ஆணையத்தின் உண்மை முகம் அம்பலமாகியிருக்கிறது. ஒரு சுயேட்சை வேட்பாளரின் மனுவை இவ்வளவு மெத்தனமாக ஆய்வு செய்து சின்னம் வழங்கியிருக்கிறது. பச்சை மிளகாய் சின்னத்தை ஜெபமணி மோகன்ராஜுக்கு வழங்கிவிட்டு, தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள பொது மக்கள் கண்ணில் பச்சை மிளகாய் வைக்கப்பட்டிருக்கிறது.

இதையும் வாசிக்க:மோடி இல்ல, அவரது டாடி வந்தாலும் அதிமுகவை காப்பாற்ற முடியாது: டி.டி.வி செம்ம கலாய்!?