கொசுவை விரட்ட கொளுத்திய தீ ! மூதாட்டியுடன் சேர்ந்து ஆடுகள் பலி !

 

கொசுவை விரட்ட கொளுத்திய தீ ! மூதாட்டியுடன் சேர்ந்து ஆடுகள் பலி !

நாகையில் கொசுவை விரட்டுவதற்காக கொளுத்திய தீ கொட்டகைக்கும் பரவியதால் மூதாட்டி மற்றும் 15 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தன.

நாகையில் கொசுவை விரட்டுவதற்காக கொளுத்திய தீ கொட்டகைக்கும் பரவியதால் மூதாட்டி மற்றும் 15 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தன.

ttn

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு வடக்கு பகுதியில் வசித்து வந்தார் மூதாட்டி அஞ்சம்மாள். இவருக்கு சொந்தமாக 15 ஆடுகள் உள்ளது. அவை அனைத்தையும் கொட்டகையில் கட்டப்பட்டிருந்தது. அதை பராமரிக்க அஞ்சம்மாள் கொட்டகைக்கு சென்றுள்ளார். அப்போது கொசுத் தொல்லை அதிகமாக இருக்க சில தழைகளை போட்டு புகை வருவதற்காக கொளுத்தியுள்ளார்.

ttn

ஆனால் தழையுடன் சேர்ந்து அருகில் இருந்த கொட்டகைக்கும் தீப்பிடித்தது. தீ ஆட்டுக்கொட்டகை முழுவதும்  தீ பரவியதால் அதில் சிக்கி அஞ்சம்மாள் கருகி உயிரிழந்தார். அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் அவரை காப்பற்ற முடியவில்லை. மேலும் ஆட்டுக் கொட்டகையில் இருந்த 15 ஆடுகளும் தீக்கு இரையாகின. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்துள்ளனர். விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.