கை கொடுங்கள் காலை வாராதீர்கள்: அமைச்சர் ஜெயக்குமார்

 

கை கொடுங்கள் காலை வாராதீர்கள்: அமைச்சர் ஜெயக்குமார்

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை கொடுங்கள் அவர்களின் காலை வாராதீர்கள் என எதிர்க்கட்சிகள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

நாகை: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை கொடுங்கள் அவர்களின் காலை வாராதீர்கள் என எதிர்க்கட்சிகள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

கஜா புயலால் நிலைகுலைந்து கிடக்கும் நாகை மாவட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் புயல் நிவாரண பொருட்களை வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், போர்க்கால அடிப்படையில் அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு கட்சி தலைவர் முதல்நாள் அரசை பாராட்டிவிட்டு மறுநாள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்துவிட்டு வருகிறார். அதன் பிறகுதான் அங்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன. 

மக்களை யாரும் தூண்டிவிட வேண்டாம். இந்த நேரத்தில் இந்த விஷயத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கைகொடுக்க வேண்டுமே ஒழிய காலை வாரக்கூடாது என்றார்.