கை, கால்கள் கட்டப்பட்டு சடலமாகக் கிடந்த 16 வயது சிறுமி..பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரன் கைது !

 

கை, கால்கள் கட்டப்பட்டு சடலமாகக் கிடந்த 16 வயது சிறுமி..பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரன் கைது !

இந்த வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்த மதிக்குமார் என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் வடக்கு நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தனது மகளைக் காணவில்லை என்று காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்ட வந்தனர். இதனிடையே, நேற்று அந்த சிறுமியின் வீட்டிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் சடலம் இருப்பதைக் கண்ட பொதுமக்கள் அந்த சிறுமியின் தந்தைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

ttn

காட்டுப் பகுதியில் அந்த சிறுமியின் கை-கால் கட்டப்பட்டு தலையில் காயத்துடன் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  அதன் பிறகு , சடலமாகக் கிடப்பது தன் மகள் தான் என்பதை உறுதி செய்துள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் மோப்ப நாயுடன் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

ttn

இந்த வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்த மதிக்குமார் என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவர் தான் அந்த சிறுமியைக் கொலை செய்தார் என்பது உறுதியானதைத் தொடர்ந்து, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ttn

அதில், தனக்கும் அந்த சிறுமிக்கும் பழக்கம் இருந்ததாகவும், அந்த சிறுமி வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் இதனைத் தான் கண்டித்தும் அதனை அந்த சிறுமி கேட்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தான் கூறியதைக் கேட்காததால் காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து தலையில் கல்லைப்போட்டுக் கொன்று விட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கொலையில் வேறு நபர்களுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று காவல்துறையினர் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.