‘கைவிலங்குடன் காதல் சின்னம் காட்டும் காசி’… வசமாக சிக்கிய ரோமியோவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

 

‘கைவிலங்குடன் காதல் சின்னம் காட்டும் காசி’… வசமாக சிக்கிய ரோமியோவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

இவர் மீது கன்னியாகுமரி எஸ்.பியிடம் ஒரு பெண் மருத்துவர் புகார் அளித்ததன் பேரில் கடந்த மாதம் 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் காசி(26) சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ படித்து விட்டு, மீண்டும் நாகர்கோவிலுக்கே வந்துள்ளார். அப்பாவின் கறிக்கடையை பார்த்துக் கொண்டு வரும் அவர், எப்போது பார்த்தாலும் சோஷியல் மீடியாக்களை உபயோகப்படுத்திக் கொண்டே இருப்பாராம். அதாவது கட்டுடல் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக பெண்களுக்கு மாய வலையை விரித்துள்ளார் காசி. அதில் சிக்கும் பெண்களிடம் பேசி, பழகி ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டு அவர்களிடம் காசு கேட்டு மிரட்டி, பணம்  பறித்துள்ளார். 

ttn

இதையே தொழிலாக செய்து வந்த காசியின் மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. குறிப்பாக பொருளாதார வசதி இருக்கும் பெண்களையே குறி வைத்து காசி, வலை விரித்த இவர் மீது கன்னியாகுமரி எஸ்.பியிடம் ஒரு பெண் மருத்துவர் புகார் அளித்ததன் பேரில் கடந்த மாதம் 24 ஆம் தேதி இவர் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமில்லாமல் அவரிடம் இருந்த லேப்டாப், ஹார்ட் டிஸ்க் என அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

ttn

இந்நிலையில் காசியை போலீசார் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். அப்போது, காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்குமாறு நீதிபதிகள் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார்? இவருக்கு எத்தனை பேர் உதவி செய்துள்ளனர்? உள்ளிட்ட பல கேள்விகளை முன்வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கைவிலங்குடன் காசி காதல் சின்னம் காட்டுவது  போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.