கைலாசா நாட்டில் இந்த நடிகையுடன் தான் செட்டிலாவேன்…பிக் பாஸ் பிரபலம் ஓபன் ஸ்டேட்மெண்ட்!
கைலாசா என்ற சொந்தத் தீவை வாங்கி அதற்கு கைலாசா நாடு என்று பெயரிட்டிருப்பதாகக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது.
நித்தியானந்தா மீது ஆள்கடத்தல், பண மோசடி, பாலியல் புகார்கள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களும் வழக்குகளும் பாய்ந்துள்ளது.
மத்திய அரசு நித்தியானந்தாவை பிடிக்க ஆயுத்தமாகி வரும் நிலையில் அவரின் ஈக்வேடார் நாட்டில் கைலாசா என்ற சொந்தத் தீவை வாங்கி அதற்கு கைலாசா நாடு என்று பெயரிட்டிருப்பதாகக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது.
இதுகுறித்து விளக்கமளித்த நித்தியானந்தா, இந்து மதத்தைப் பின்பற்றும் யார் வேண்டுமானாலும் கைலாசா நாட்டின் குடியுரிமையைப் பெறலாம் . கைலாசா இந்து நாட்டின் தற்போதைய மொத்த மக்கள் தொகையாக 10 கோடிப் பேர் என்று கூறிய அவர் இதற்கு பாஸ்போர்ட், மொழி, இணையதளம் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டிருந்தார். இதனால் மீம்ஸ் கிரியேட்டர்கள் சமூகவலைதளங்களில் நித்தி மற்றும் கைலாசா இரண்டையும் கையிலெடுத்து பங்கமாக கலாய்த்து வந்தனர்.
இந்நிலையில் விருது விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஹரிஷ் கல்யாணிடம், நீங்கள் எந்த நடிகையுடன் கைலாசா நாட்டில் செட்டில் ஆவீர்கள்? என்று ஜாலியாக கேள்வி கேட்க, நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் செட்டில் ஆவேன் என்று கூறினார்.