கைலாசா நாட்டிற்கு டிக்கெட் அனுப்பி வைத்தால் குடும்பத்துடன் போவேன் – எஸ்.வி.சேகர்

 

கைலாசா நாட்டிற்கு டிக்கெட் அனுப்பி வைத்தால் குடும்பத்துடன் போவேன் – எஸ்.வி.சேகர்

நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்கு டிக்கெட் அனுப்பி வைத்தால் குடும்பத்தோடு அங்க போய் செட்டில் ஆகிவிடுவேன் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். 

நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்கு டிக்கெட் அனுப்பி வைத்தால் குடும்பத்தோடு அங்க போய் செட்டில் ஆகிவிடுவேன் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். 

நித்தியானந்தா மீது ஆள்கடத்தல், பண மோசடி, பாலியல் புகார்கள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களும் வழக்குகளும் பாய்ந்துள்ளது. அதேசமயம் குஜராத் மாநிலம் ஹீராபூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடியது. மேலும் ஆசிரமத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஆசிரம நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நித்தியானந்தாவை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். ஆனால் காவல்துறையினருக்கு டிமிக்கிக் கொடுத்துவரும் நித்தியானந்தா அவ்வப்போது யூடியூபில் தலைக்காட்டி பிரசங்கம் என்ற பெயரில் ஏதாவது உளறிக்கொண்டிருக்கிறார். சர்ச்சை சாமியார் நித்தியானாந்தாவை வரும் 18 ஆம் தேதிக்குள் ஆஜர்படுத்த கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Nithyananda

இந்நிலையில் நித்தியானந்தாவிற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் எஸ்.வி.சேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கைலாசா நாடு இருப்பது உண்மையே. நான் யாரிடமும் காசு வாங்கிக்கொண்டு நித்தியானந்தாவிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. உண்மையில் டிக்கெட் கொடுத்தால் கைலாசாவுக்கு குடும்பத்துடன் சென்று வருவேன். ஆகில இந்திய சன்னியாசிகள் சங்கதலைவராக நித்தியானந்தா இருப்பதால் அவரை கைது செய்ய வாய்ப்பில்லை. அதுமட்டுமின்றி கைலாசாவில் ஓரினச் சேர்க்கை, திருமணத்தை மீறிய உறவு உள்ளிட்ட 11 பாலியல் செயல்பாடுகளுக்கு சட்டப்பூர்வ அனுமதி இருப்பது எனக்கு தெரியாது” என்று கூறியுள்ளார்.