கையைக் கழுவினால் சாகும், தொண்டையை கழுவினா சாகாதா? – மதுக்கடைகளைத் திறக்கச் சொன்ன ராஜஸ்தான் எம்.எல்.ஏ!

 

கையைக் கழுவினால் சாகும், தொண்டையை கழுவினா சாகாதா? – மதுக்கடைகளைத் திறக்கச் சொன்ன ராஜஸ்தான் எம்.எல்.ஏ!

மது அருந்தினால் அதில் உள்ள ஆல்கஹால் தொண்டையில் உள்ள கிருமிகளை அழித்துவிடும், எனவே, மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்று ராஜஸ்தானில் எம்.எல்.ஏ ஒருவர் முதல்வருக்கு கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது அருந்தினால் அதில் உள்ள ஆல்கஹால் தொண்டையில் உள்ள கிருமிகளை அழித்துவிடும், எனவே, மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்று ராஜஸ்தானில் எம்.எல்.ஏ ஒருவர் முதல்வருக்கு கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

bharat-singh-kundanpur

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ பரத் சிங் குந்தன்பூர் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில் அவர், “ஆல்கஹால் கலந்த சானிடைசரை பயன்படுத்தினால் கையில் உள்ள கொரோனா வைரஸ் கிருமி அழிகிறது என்றால், மதுவை அருந்தும்போது அதில் உள்ள ஆல்கஹால் தொண்டையில் உள்ள வைரஸ் கிருமியை நிச்சயம் அகற்றிவிடும். எனவே, ராஜஸ்தானில் மதுக்கடைகளைத் திறக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும் மதுக்கடைகளைத் திறப்பதன் மூலம் கள்ளச்சாராயம் பெருகுவதைத் தடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் இந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.