கையில் துப்பாக்கி, கத்தியுடன் தனியார் கல்லூரி மாணவர்கள் மோதல்..!

 

கையில் துப்பாக்கி, கத்தியுடன் தனியார் கல்லூரி மாணவர்கள் மோதல்..!

சண்டையில் ஈடுபட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் கத்தியையும் துப்பாக்கியையும் கொண்டு சண்டை போட்டுக் கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கல்லூரி மாணவர்களுக்கும் மற்ற கல்லூரி மாணவர்களுக்கும் சண்டை நடப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால், சண்டையில் ஈடுபட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் கத்தியையும் துப்பாக்கியையும் கொண்டு சண்டை போட்டுக் கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ttn

 செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த பொத்தேரியில் அமைந்துள்ளது எஸ்.ஆர்.எம் கல்லூரி. அந்த கல்லூரி மாணவர்கள் நேற்று எதிரே இருந்த டீக்கடையில் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகறாரில் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர்.

ttn

குறிப்பாக சண்டையில் ஈடுபட்ட மாணவர்கள் சாதாரணமாகத் துப்பாக்கி மற்றும் கத்தியை எடுத்து ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டனர். இதனை அங்கு நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். 

ttn

அந்த காணொளியைப் பார்த்த போலீசார் சண்டையில் ஈடுபட்ட மாணவர்களைத் தேடி வருகின்றனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வண்டலூரில் முகேஷ் என்ற மாணவன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது மீண்டும் கல்லூரி மாணவர்கள் துப்பாக்கியை வைத்துக் கொண்டு சண்டை போடுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரித்து வரும் போலீசார், மாணவர்களின் கையில் துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.