கைக்குழந்தையுடன் மலையின் மீது ஏறி பிரபல நடிகை சாகச பயணம்: வசைபாடும் நெட்டிசன்கள்!

 

கைக்குழந்தையுடன் மலையின் மீது ஏறி  பிரபல நடிகை சாகச பயணம்: வசைபாடும் நெட்டிசன்கள்!

கர்ப்பிணியாக இருக்கும் போதே  அடிக்கடி சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியாகப் புகைப்படங்கள் வெளியிட்டு அதிர்ச்சியைக் கிளப்பினார். 

நடிகை சமீரா ரெட்டி தனது கைக்குழந்தையுடன் உயரமான மலை சிகரத்தில் ஏறியுள்ள சம்பவம் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

sameera

தமிழ் சினிமாவில் சூர்யாவுடன் இணைந்து வாரணம் ஆயிரம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி.  அதைத்தொடர்ந்து வெடி, அசல், வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும்  மகாராஷ்டிராவைச் சேர்ந்த அக்ஷய் வர்தே என்கிற தொழில் அதிபருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், மீண்டும் 4 ஆண்டுகள் கழித்து சமீரா இரண்டாவது முறையாகக் கர்ப்பமானார். கர்ப்பிணியாக இருக்கும் போதே  அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியாகப் புகைப்படங்கள் வெளியிட்டு அதிர்ச்சியைக் கிளப்பினார். 
இதையடுத்து கடந்த ஜூலை மாதம் சமீராவுக்கு மும்பையில் பெண் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில் நடிகை சமீரா ரெட்டி  இரண்டு மாத கை குழந்தையுடன் கர்நாடகாவின் உயர்ந்த சிகரமான முல்லயநாகிரிக்கு சென்றுள்ளார். அந்த மலையானது கடல் மட்டத்திலிருந்து 6300 அடி உயரத்தில் உள்ளது. இதை தனது சமூகவலைதள  பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தொடர்ந்து செல்லலாம் என்று நினைத்தேன். ஆனால்  மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பயணத்தைப் பாதியில் நிறுத்தி விட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு வலைதளவாசிகள் பலரும் பாராட்டும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.