கைகளை சோப் கொண்டு ஏன் கழுவ வேண்டும்? – கிரண் பேடி வெளியிட்ட அசத்தல் வீடியோ
கைகளை சோப் கொண்டு கழுவ வேண்டியதன் அவசியத்தை சொல்லும் வீடியோவை ஆளுநர் கிரண் பேடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
புதுச்சேரி: கைகளை சோப் கொண்டு கழுவ வேண்டியதன் அவசியத்தை சொல்லும் வீடியோவை ஆளுநர் கிரண் பேடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி வருகிறது. இந்தியாவிலும் அதன் பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு அறிவுறுத்தல்களை மாநில அரசுகள் மக்களுக்கு தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி உட்பட பல்வேறு முக்கிய பிரபலங்கள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி வருகின்றனர்.
Why must we wash our hands with soap and water.
See how a teacher has taught her school children.
Excellent for adults too. #COVID2019uk pic.twitter.com/I4cxv6gheC— Kiran Bedi (@thekiranbedi) March 14, 2020
இந்த நிலையில், கொரோனா வைரஸை தடுக்க கைகளை சோப் கொண்டு கழுவ வேண்டியதன் அவசியத்தை சொல்லும் வீடியோவை ஆளுநர் கிரண் பேடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். சோப் நனைத்த விரலால் அழுக்கு நீரை தொடும்போது அந்த நீரில் உள்ள தூசு அழுக்குகள் உடனடியாக விலகி செல்கின்றன. இந்த செயல்முறையை ஒரு ஆசிரியர் தன்னுடைய பள்ளி குழந்தைகளுக்கு செய்து காட்டியுள்ளார். அதன் வீடியோவை புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.