கே.ஜி.ஃஎப் 2 படத்திலிருந்து வெளியேறிய பிரபல நடிகர்!? அதிர்ச்சியில் படக்குழு

 

கே.ஜி.ஃஎப் 2 படத்திலிருந்து வெளியேறிய பிரபல நடிகர்!? அதிர்ச்சியில் படக்குழு

இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் கே.ஜி.ஃஎப் தான் முதலிடத்தில் இருக்கும். அந்த அளவிற்கு முதல் பாகத்தில் சஸ்பென்ஸ் ஏற்றிவிட்டார்கள். ராக்கி பாய் எப்படி தங்கசுரங்கத்தை கைப்பற்றினார், ஒன்று  மூன்று மடங்காகி விட்ட எதிரிகளை எப்படி சமாளிக்கப் போகிறார் அவரை ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். எந்த வித எதிரிப்பார்ப்பும் இன்றி வெளியாகி இந்தியா முழுவதும் வசூலை வாரிக்குவித்தது

இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் கே.ஜி.ஃஎப் தான் முதலிடத்தில் இருக்கும். அந்த அளவிற்கு முதல் பாகத்தில் சஸ்பென்ஸ் ஏற்றிவிட்டார்கள். ராக்கி பாய் எப்படி தங்கசுரங்கத்தை கைப்பற்றினார், ஒன்று  மூன்று மடங்காகி விட்ட எதிரிகளை எப்படி சமாளிக்கப் போகிறார் அவரை ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். எந்த வித எதிரிப்பார்ப்பும் இன்றி வெளியாகி இந்தியா முழுவதும் வசூலை வாரிக்குவித்தது. இந்த படத்திற்குப் பிறகு யாஷின் புகழ் இந்தியா முழுவதும் பரவியது. 

kgf

கே.ஜி.ஃஎப் 2-ன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் பாகத்தில் இடப்பெறும் நடிகர்கள் வரிசையைப் பார்க்கும் போது எதிர்ப்பார்ப்பு உச்சக்கட்டத்திற்கு எகிறுகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் மற்றும் சஞ்சய் தத் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். கே.ஜி.எஃப் சேப்டர் 1-ல், இந்த படத்தில் மூத்த கன்னட நடிகர் அனந்த்நாக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளார் . இருப்பினும், படத்தின் கதையில் கருத்து வேறுபாடு காரணமாக படத்திலிருந்து வெளியேறிவிட்டார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

anant-nag

முதல் பகுதியில் ஒரு பத்திரிகையாளராக நடித்திருந்த அனந்த்நாக், படம் முழுவதும் கதையை விவரித்து வந்தார். எனவே அவரது பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போது அவர் திரைப்படத்திலிருந்து வெளியேறுவது கேஜிஎஃப் படக்குழுவுக்கு ஒரு பெரிய அடியாக இருக்கும். அவர் படத்திலிருந்து வெளியேறியது பற்றி அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. 

இரண்டாம் பாகத்திலும் ராக்கி பாய்க்கு பில்டப் கொடுக்க வருவாரா? என பொறுத்திருந்து பார்ப்போம்!