கே.எஸ்.ரவிக்குமாருக்கு ரஜினி கொடுத்த எதிர்பாராத ட்விஸ்ட்! ரஜினி ரசிகர்களுக்கும் தான்…

 

கே.எஸ்.ரவிக்குமாருக்கு ரஜினி கொடுத்த எதிர்பாராத ட்விஸ்ட்! ரஜினி ரசிகர்களுக்கும் தான்…

சூப்பர் ஸ்டார் ரஜினி ‘தர்பார்’படப்பிடிப்பில் பரபரப்பாக இருக்கிறார். இந்தப் படம் முடிந்த பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அடுத்த படம் என்ற உற்சாகத்தில் இருக்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள். இதில்தான் ஒரு எதிர்பாராத ட்விஸ்ட்!

சூப்பர் ஸ்டார் ரஜினி ‘தர்பார்’படப்பிடிப்பில் பரபரப்பாக இருக்கிறார். இந்தப் படம் முடிந்த பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அடுத்த படம் என்ற உற்சாகத்தில் இருக்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள். இதில்தான் ஒரு எதிர்பாராத ட்விஸ்ட்!

படையப்பா பார்ட் டூ என்பதாக வந்த தகவல்கள் உண்மையில்லை.இது வேறொரு கதை.அதுவும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத கதைதான்.சில ஆண்டுகளுக்கு முன்பு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘ராணா’ என்றொரு படத்தை இயக்குவதாக இருந்தார்.சூப்பர் ஸ்டார் அப்பா,மகன் என இரண்டு வேடத்தில் நடிப்பதாகவும்,சௌந்தர்யா தயாரிப்பார் என்றும் சொல்லப்பட்டது.

rajini

சில காரணங்களால் அந்தப் படம் டிராப் ஆகிவிட்டது.ரெடியா இருக்கிற கதையை எதுக்கு சும்மா வச்சிருக்கணும்னு நினைத்த ரவிக்குமார், சிரஞ்சீவியைப் பார்த்து கதை சொல்லியிருக்கிறார். கதை பிடித்துப்போக, அப்பாவாக சிரஞ்சீவியும்,மகனாக,ராம் சரணும் நடிப்பதென்று முடிவாகிவிட்டது.

rajini

ரஜினிக்காக பண்ணி வச்ச கதை,அவருகிட்ட ஒரு வார்த்தை சொல்லிடலாம் என்றுதான் போயஸ் கார்டன் வீட்டுக்கு போயிருக்கிறார் ரவிக்குமார்.உடல் நலம் விசாரிப்பு,சினிமா என நடந்த பொதுவான உரையாடலுக்கு அப்புறம்,சார்… இந்த ராணா புராஜெ’என்று சொல்லி ‘க்ட்’போட்டு வார்த்தையை முடிக்கிறதுக்குள்ள ‘கண்டிப்பா பன்றோம் ரவி’ என்றிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

அப்பறமென்ன சிரஞ்சீவிக்கு ஸாரி சொல்லிட்டு,ராணாவை பட்டி டிங்கரிங் பண்ற வேலையை ஆரம்பித்துவிட்டார் ரவிக்குமார்.

இதையும் படிங்க: இளையராஜாவுக்காக பாடகர் யேசுதாஸ் செய்த காரியத்தை பார்த்திங்களா?