கேஸுக்காக சென்ற இடத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர்!

 

கேஸுக்காக சென்ற இடத்தில்  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர்!

காரின் அடிப்படையில் ஏட்டு அய்யாசாமி செந்தில்குமார் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவரின் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இருந்துள்ளார். 

நாகை மாவட்டம், திருமருகலை அடுத்த புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கடந்த சில நாட்களுக்கு  முன்பு குடும்பப் பிரச்னை காரணமாக  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் ஏட்டு அய்யாசாமி செந்தில்குமார் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவரின் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இருந்துள்ளார். 

ttn

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் மது அருந்திவிட்டு போதையில் சிறுமியின் வீட்டுக்கு வந்திருக்கிறார் ஏட்டு அய்யாசாமி. அங்கு இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி அலறி கூச்சலிட ஏட்டு அய்யாசாமி அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். இதை தொடர்ந்து செந்தில்குமார் மீண்டும் நன்னிலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்க அய்யாசாமி மீது நடவடிக்கை எடுக்காத போலீசார், அவரை சிறுமியின் காலில்  விழவைத்து விஷயத்தை மூடி மறைந்துள்ளனர்.

ttn

இதையடுத்து அந்தச் சிறுமியின் தந்தை திருவாரூர் மாவட்ட எஸ்.பி துரையிடம் முறையிட்டிருக்கிறார். அவர் உடனே நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய விசாரணைக்குப் பரிந்துரை செய்திருக்கிறார். அதன்படி போலீசார் ஏட்டு அய்யாசாமியைக் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் ஏட்டு  அய்யாசாமி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியான நிலையில் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.