‘கேவலமா என் பின்னாடி சுத்தாம போய் பொழப்ப பாரு’ : டிவிட்டரில் மோதி கொள்ளும் மீரா மிதுன் – அபிராமி

 

 ‘கேவலமா என் பின்னாடி சுத்தாம போய் பொழப்ப பாரு’ : டிவிட்டரில் மோதி கொள்ளும் மீரா மிதுன் – அபிராமி

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன் – அபிராமி ஆர்மியினர்  இடையே டிவிட்டரில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன் – அபிராமி ஆர்மியினர்  இடையே டிவிட்டரில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. 

meera

பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களில் ஒருவராக வலம்வந்தவர் மீரா மிதுன். அழகி போட்டி நடத்துவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் வந்தன. அதேபோல் பிக் பாஸ் வீட்டுக்குள் பல சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமானார். இதையடுத்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளிவந்த வந்த மீரா மிதுன் சாண்டியை தவிர மற்ற போட்டியாளர்களைச் சாடி வருகிறார். 

 

இந்நிலையில்  மீராமிதுன் புகைப்படம் ஒன்றிற்கு அபிராமி ஆதரவாளர் ஒருவர், ‘அமானுஷ்ய சக்தியே செத்துரு இன்னும் ஏன் உயிரோடு இருக்க என்று கேட்டுள்ளார். இதைக்கண்டு கடுப்பான மீரா மிதுன், அபிராமி வாழ்க்கை கொடுத்ததே நான்தான்.  கேவலமா என் பின்னாடி சுத்தாம போய் பொழப்ப பார்க்க சொல்லு. நான் ஆளப்பிறந்தவன் சாவுக்கு அஞ்சாதவ, மேலும், வேணா கயிறு அனுப்புகிறேன்’ என்று கடுமையாக சாடியுள்ளார். 

abi

மற்றொரு பதிவில், ‘என் தயவால் தான் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய். என்னை திட்டி தீர்க்க பணத்தை செலவு செய்யாதே. எனது ரசிகர்கள் பற்றி உனக்கு தெரியும் தானே…அவர்கள் உன்னை எரித்து விடுவார்கள். மாஃபியா  கும்பலுடன் நீ நீ செய்த குற்றத்திற்காக விரைவில் உள்ளே போவாய்’ என்று கூறியுள்ளார். 

சமீபகாலமாகச் சாக்ஷி மற்றும் அபிராமியை மீரா மிதுன் இணையத்தில் கடுமையாகச் சாடி வருவதும், அவர்களிடம்  வாங்கிக்கட்டிக் கொள்வதும் குறிப்பிடத்தக்கது.