கேவலமாக பணத்திற்காக மண்டியிட்டீர்களே கமல்? கமலை திட்டி தீர்த்த ஹெச்.ராஜா: காரணம் இதுதான்!?

 

கேவலமாக பணத்திற்காக மண்டியிட்டீர்களே கமல்? கமலை திட்டி தீர்த்த ஹெச்.ராஜா: காரணம் இதுதான்!?

தேர்தல் பரப்புரையின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

அரவக்குறிச்சி:  தேர்தல் பரப்புரையின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

vote

மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறும் என்று அறிவித்த நிலையில் ஆறாம் கட்ட தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

kamal

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அரவக்குறிச்சியில்  அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,    முஸ்லிம்கள் அதிகம்  வாழும் இடம் என்பதற்காக நான் இதைக் கூறவில்லை. காந்தியின் சிலையின் முன்பு நின்று கூறுகிறேன். சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அங்கு தொடங்கியது தீவிரவாதம். நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அவரை கொலைக்கு நியாயம் கேட்க  வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இது சமமான, சமரசமான  இந்தியாவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது நல்ல இந்தியனின் விருப்பம். நான்  நல்ல இந்தியன், அதை மார்தட்டிச் சொல்வேன்’ என்றார். 

hraja

கமலின் இந்த பேச்சுக்கு ஹெச். ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ‘முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மநீம. முஸ்லிம் ஓட்டுக்காக இந்துக்களை இழிவு படுத்தும் செயலைப் பாருங்கள். திருப்புவனம் இராமலிங்கத்தின் படுகொலையை கண்டிக்கதா கோழை.

 

திரு. அநாமதேயம் ( Anonymous one) கமலஹாசன் நான் தூக்கம் இழக்கும் அளவிற்கு பெரிய சக்தி அல்ல. இவரால் 1% வாக்குகள் கூட வாங்க முடியாது. ஆனால் விஸ்வரூபம் படத்திற்கு இவர் பயங்கரவாதிகள் முன் கேவலம் பணத்திற்காக மண்டியிட்டதை மறக்க முடியவில்லை’ என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.