கேள்வி ஞானத்தினால் கோட்டை ஆளும் நட்சத்திரம்!

 

கேள்வி ஞானத்தினால் கோட்டை ஆளும் நட்சத்திரம்!

கேட்டை நட்சத்திரத்தின் தேவதையாக தேவேந்திரன் இருக்கிறார். புதனின் இரண்டாவது நட்சத்திரமாகத் கேட்டை நட்சத்திரம் திகழ்கிறது.

கேட்டை நட்சத்திரத்தின் தேவதையாக தேவேந்திரன் இருக்கிறார். புதனின் இரண்டாவது நட்சத்திரமாகத் கேட்டை நட்சத்திரம் திகழ்கிறது.

‘கேட்டையில் பிறந்தவர்கள் கோட்டை கட்டி ஆள்வார்கள்’ என்ற பழமொழி கேட்டை நட்சத்திரத்திற்கு கூறப்படுவதுண்டு. அதற்கேற்ப குறைந்தபட்சம் கோட்டையில் இருந்து ஆட்சி செய்பவர்களின் நட்பை கேட்டை நட்சத்திரக்காரர்கள் பெற்றிருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஏகலைவன் போல யாருடைய உதவியும் இல்லாமல் தங்களுடைய சுயமுயற்சியால் எந்த விஷயத்திலும் முன்னேறக் கூடியவர்களாக இருப்பார்கள்.

ttn

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் பலபேர் கதாசிரியர், நூல் வெளியீட்டாளர், பத்திரிகை நிருபர், உளவாளி, மனோதத்துவ நிபுணர், நடிகர் போன்ற வேலைகளில் பிரகாசிப்பார்கள். மேலும் மன தைரியம் மிக்கவர்களாக இருப்பார்கள். எந்த நேரத்திலும் முகத்தில் சிரிப்புடன் இருப்பார்கள். மற்றவர்களுக்கு ஓடோடி உதவி செய்வதில் முதன்மையானவராக திகழ்வார்கள். கேட்டையில் பிறந்தவர்கள் நொறுக்குத் தீனி சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுவார்கள். ஒருவரிடம் கைகட்டி வேலை செய்யாமல், சுயதொழில் செய்து பணம் ஈட்டுபவராக இருப்பார்கள்.

நிறைய புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இருப்பதால் சுயமாக சிந்தித்து செயல்படுபவராக கேட்டையில் பிறந்தவர்கள் இருப்பார்கள். மேலும் வருங்காலத்தை உணர்ந்து செயல்படுபவராகவும், பேச்சாற்றல் மிக்கவர்களாகவும் கேட்டை நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள். குடும்பத்தினரிடன் பாசத்தையும், கண்டிப்பையும் சம அளவில் காட்டுபராக நடந்து கொள்வார்கள். கேட்டையில் பிறந்தவர்களுக்கு நட்பு வட்டம் பெரிதாக இருக்கும். செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுபவராகவும் திகழ்வார்கள்.