கேலி செய்தவருக்கு சரியான பதிலடி கொடுத்த ‘பாகுபலி ராணா’

 

கேலி செய்தவருக்கு சரியான பதிலடி கொடுத்த ‘பாகுபலி ராணா’

டோலிவுட்டில் மிகவும் செல்வாக்கு பெற்ற நடிகர் ராணா டகுபதி. பாகுபலி படத்திற்கு பின் இவர் புகழ் இந்தியா முழுவதும் பரவியது. பாகுபலி படத்திற்க்காக அவர், தனது உடலை மெருகேற்றிய அர்ப்பணிப்பு அனைவரையும் வியக்க வைத்தது. திரைபின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் தனது கடின  உழைப்பின் மூலம் தனக்கென தனி இடத்தை உருவாக்கியிருக்கிறார் ராணா. 

டோலிவுட்டில் மிகவும் செல்வாக்கு பெற்ற நடிகர் ராணா டகுபதி. பாகுபலி படத்திற்கு பின் இவர் புகழ் இந்தியா முழுவதும் பரவியது. பாகுபலி படத்திற்க்காக அவர், தனது உடலை மெருகேற்றிய அர்ப்பணிப்பு அனைவரையும் வியக்க வைத்தது. திரைபின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் தனது கடின  உழைப்பின் மூலம் தனக்கென தனி இடத்தை உருவாக்கியிருக்கிறார் ராணா. 

rana

சமீபத்தில் ஒரு நாளிதழில் ராணா பற்றி வெளியான கட்டுரை, “நான் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தேன், ஆனால் அது என் கனவுகளைப் பின்பற்றுவதை ஊக்கப்படுத்தவில்லை” என்ற தலைப்போடு வந்தது.

ராணாவிற்கு எதிர்ப்பாளர்கள் நிறைய  பேர் உள்ளனர். அதில் ஒருவர் இதை மேற்கோள் காட்டி, “உங்களைப் போல் எங்களுக்கும் ப்ரொடக்சன் ஹவுஸ் மற்றும் மிகப்பெரிய ஸ்டுடியோ இருந்தால்” நாங்களும் கவலைப்படமாட்டோம் என்று பதிவிட்டிருந்தார். 

rana

இதைக் கண்ட ராணா, அந்த நபருக்கு தக்க பதிலடி கொடுக்க முடிவு செய்தார். மிகவும் பணிவுடன், “நீங்கள் ஒருதோற்றுபோனவர் என்று இந்த உலகமே உங்களைப்  பார்த்து சொன்னாலும், உங்கள் கனவை பின்தொடர்வதை கைவிடாதீர்கள்” என்று பதிலளித்திருந்தார்.