கேரள முதல்வருக்கு விழுந்த முதல் அடி: பினராயி விஜயனை சாடிய ஹெச்.ராஜா
சபரிமலை விவகாரம் தொடர்பாக ஆலொசனை நடத்த அழைப்பு விடுத்தும் பிற மாநில அமைச்சர்கள் செல்லாமல் விட்டது பினராயி விஜயனுக்கு விழுந்திருக்கும் முதல் அடி என ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
சென்னை: சபரிமலை விவகாரம் தொடர்பாக ஆலொசனை நடத்த அழைப்பு விடுத்தும் பிற மாநில அமைச்சர்கள் செல்லாமல் விட்டது பினராயி விஜயனுக்கு விழுந்திருக்கும் முதல் அடி என ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
சபரிமலை விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த தென் மாநிலங்களின் அறநிலையத்துறை அமைச்சர்களுக்கு கேரள முதல்வர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அந்த கூட்டத்திற்கு எந்த முதல்வரும் தங்களது அமைச்சர்களை அனுப்பவில்லை என கூறப்படுகிறது.
இன்று கேரள முதல்வர் தென் மாநிலங்களின் அறநிலையத்துறை அமைச்சர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் எந்த முதல்வரும் தங்களது அமைச்சர்களை அனுப்பவில்லை. சபரிமலை பிரச்சினை குறித்து தனது இந்து விரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவு தேடும் முயற்சிக்கு விஜயன் அவர்களுக்கு முதல் அடி. pic.twitter.com/tlVqZ8ns5r
— H Raja (@HRajaBJP) October 31, 2018
இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், தென் மாநிலங்களின் அறநிலையத்துறை அமைச்சர்களுக்கு கேரள முதல்வர் அழைப்பு விடுத்தும் எந்த முதல்வரும் தங்களது அமைச்சர்களை அனுப்பவில்லை என்றும் இது கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு விழுந்திருக்கும் முதல் அடி என்றும் விமர்சித்துள்ளார்.