கேரள மாநிலத்தில் இன்று கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை – முதலமைச்சர் பினராயி விஜயன்

 

கேரள மாநிலத்தில் இன்று கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை – முதலமைச்சர் பினராயி விஜயன்

திருவனந்தபுரத்தில் இருந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் பேசிய, “கேரளாவில் புதன்கிழமையான இன்று ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மாறாக கோட்டயம் 6, பத்தனம்திட்டாவில் ஒருவர் என ஏழு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 37லிருந்து 30 ஆக குறைந்துள்ளது.

மாநிலத்தில் அதிகபட்சமாக கண்ணூரில் 18 பேர் உட்பட காசர்கோடு, வயநாடு, கொல்லம், இடுக்கி, பாலக்காடு ஆறு மாவட்டங்களில் மட்டுமே கொரோன பாதிப்புகள் உள்ளது. மீதமுள்ள கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா, ஆலபுழா திருவனந்தபுரம் ஆகிய எட்டு மாவட்டங்களில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.

coronavirus

கேரளாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர் 502 பேர். இதில் மூவர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 470 பேர். இதுவரை மாநிலம் முழுக்க 16,620 பேர் மருத்துவக்கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 14,402 பேர் வீடுகளிலும் 268 பேர்  மருத்துவமனைகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் இருந்து நோய் தொற்று அறிகுறியுள்ள 34,597 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதில் 34,063 பேரின் பரிசோதனை முடிவுகள் ”நெகட்டிவ்” ஆக உள்ளது” என தெரிவித்தார்.