கேரள மாணவியை எரித்த வழக்கு: குற்றவாளி அளித்த திடுக்கிடும் தகவல்?!

 

கேரள மாணவியை எரித்த வழக்கு: குற்றவாளி அளித்த திடுக்கிடும் தகவல்?!

கேரள மாநிலம், சியாராம் பகுதியில் வசித்து வந்த நீத்து எனும் கல்லூரி மாணவி, நேற்று காலை 7 மணியளவில் அவரது இல்லத்தில் வைத்து எரித்து கொலை செய்யப்பட்டார். கொலைகாரன் தப்பிக்கும் முன்பு அக்கம் பக்கத்தினர் வந்து அவனை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பொறியியல் கல்லூரி மாணவி நீத்து எரித்து கொலை செய்யப்பட்டது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொலைகாரன் நிதிஷ் அளித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

burn

கேரள மாநிலம், சியாராம் பகுதியில் வசித்து வந்த நீத்து எனும் கல்லூரி மாணவி, நேற்று காலை 7 மணியளவில் அவரது இல்லத்தில் வைத்து எரித்து கொலை செய்யப்பட்டார். கொலைகாரன் தப்பிக்கும் முன்பு அக்கம் பக்கத்தினர் வந்து அவனை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் விசாரணையில் அவன் கத்தியால் குத்தி, பின்னர் எரித்து கொலை செய்ததாக கூறப்பட்டது. இந்த வழக்கில் மேலும் சில தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sddggs

நிதிஷும் நீத்துவும் நீண்டநாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நிதிஷ் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்த, நீத்து படிப்பை முடித்த பின்பு செய்துகொள்ளலாம் என கூறியிருக்கிறார். இதனிடையே நீத்து வேறு ஒரு நபருடன் பழகியிருக்கிறார், அதனால் நிதிஷ்க்கு சந்தேகம் எழுந்துள்ளது. மீண்டும் நீத்துவிடம் திருமணம் குறித்து பேசியுள்ளான். அதற்கு நீத்து மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அவன், கத்தியால் சரமாரியாக குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளான்.