கேரளா கனமழை வெள்ளம்: 80ஸ் நடிகைகள் ரூ.40லட்சம் நிதியுதவி!

 

கேரளா கனமழை வெள்ளம்: 80ஸ் நடிகைகள் ரூ.40லட்சம் நிதியுதவி!

கேரளா: கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களுக்கு நடிகை சுஹாசினி உள்ளிட்ட சில நடிகைகள் இணைந்து ரூ.40 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.  

 

கேரளாவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி சுமார் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு அதிகளவு பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.

 

தற்போது மழை குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதால்  சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நபர்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.

 

 

தமிழகத்தைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகள், சினிமா நடிகர்கள், அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள், பொது மக்கள் என அமைத்துத் தரப்பினரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.

 

கேரளா கனமழை வெள்ளம்: 80ஸ் நடிகைகள் ரூ.40லட்சம் நிதியுதவி!

 

இந்நிலையில் தற்போது 80-களில் திரையுலகுக்கு அறிமுகமான நடிகைகளும் தங்கள் பங்கிற்கு உதவியிருக்கிறார்கள். சக திரையுலக தோழிகளிடம்  வசூலித்து மொத்தம் 40 லட்சம் ரூபாயைக் கேரள வெள்ள நிவாரணத்திற்குக் கொடுத்திருக்கிறார்கள். இதனை நடிகைகள் லிஸி, சுஹாசினி, குஷ்பு ஆகியோர்  கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.