கேரளாவைப் போலத் தமிழகத்தின் பள்ளிகளிலும் நீர் அருந்த நேரம் ஒதுக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

 

கேரளாவைப் போலத் தமிழகத்தின் பள்ளிகளிலும் நீர் அருந்த நேரம் ஒதுக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

கேரளா மாநிலத்தில் நீரின் பருகுவதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு கேரளா அரசு ஒரு புதிய முயற்சியை அமல்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் நீரின் பருகுவதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு கேரளா அரசு ஒரு புதிய முயற்சியை அமல்படுத்தியுள்ளது. அதன் படி, அம்மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் இடைவேளைக்கு பெல் அடிப்பதைப் போல ‘நீர் மணி’ என்ற பெல் அடிக்கப்படும்.

Water

அப்போது, அனைத்து மாணவர்களும் சென்று தண்ணீர் குடிக்க வேண்டுமாம். இந்த நீர் அருந்தும் முயற்சியை அனைத்து பள்ளிகளிலும் பின்பற்றும் படி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதே போல தமிழகத்திலும் அமல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

Minister Sengottaiyan

சென்னை சாந்தோம் புனித பீட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் இன்று குழந்தைகள் தின விழா நடைபெற்றது. அதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கேரளா மாநிலத்தைப் போலத் தமிழகத்திலும் நீர் அருந்த நேரம் ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு CA படிப்புக்குப் பயிற்சி வழங்கப்படும் என்றும் கூறினார்.