கேரளாவே கட்டுப்பாடு காக்கும் போது தமிழகத்துக்கு அவசரம் தேவையா? – ராமதாஸ் கேள்வி
கொரோனா நோய்ப் பரவலைத் தடுத்து நிறுத்திய கேரளாவே மது விற்பனையை ஊரடங்கு முடியும் வரை தொடங்குவது இல்லை என்று முடிவெடுத்திருக்கும்போது தமிழக அரசுக்கு இவ்வளவு அவசரம் தேவையா என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா நோய்ப் பரவலைத் தடுத்து நிறுத்திய கேரளாவே மது விற்பனையை ஊரடங்கு முடியும் வரை தொடங்குவது இல்லை என்று முடிவெடுத்திருக்கும்போது தமிழக அரசுக்கு இவ்வளவு அவசரம் தேவையா என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு முடிவடையாத நிலையில் தமிழக அரசு மே 7ம் தேதி முதல் மதுக்கடைகளைத் திறக்க உத்தரவிட்டுள்ளது. முதலில் மாநிலம் முழுக்க திறக்க உத்தரவிட்ட தமிழக அரசு திடீரென்று சென்னை மாநகர காவல் எல்லைக்குள் கடைகள் திறக்க தடை என்று அறிவித்தது. கடையைத் திறப்பதற்கு முன்பு மது பாட்டில்களின் விலையை உயர்த்தியது. அரசு நிதானத்தில்தான் உள்ளதா என்ற கேள்வியை இந்த அறிவிப்புகள் எழுப்பின.
இந்த நிலையில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில், “மதுக்கடைகள் திறக்கப்பட்டால் வீடுகளில் உள்ள மக்களின் கவனம் மது விற்கும் சாலைகளை நோக்கித் திரும்பும் என்பதால் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளைத் திறக்க கேரளம் தடை விதித்திருக்கிறது. கொரோனாவை கிட்டத்தட்ட ஒழித்துவிட்ட கேரளமே கட்டுப்பாடு காக்கும் போது தமிழகத்தில் இவ்வளவு அவசரம் தேவையா?
மதுக்கடைகள் திறக்கப்பட்டால் வீடுகளில் உள்ள மக்களின் கவனம் மது விற்கும் சாலைகளை நோக்கித் திரும்பும் என்பதால் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க கேரளம் தடை விதித்திருக்கிறது. கொரோனாவை கிட்டத்தட்ட ஒழித்துவிட்ட கேரளமே கட்டுப்பாடு காக்கும் போது தமிழகத்தில் இவ்வளவு அவசரம் தேவையா?
— Dr S RAMADOSS (@drramadoss) May 6, 2020
தமிழ்நாட்டில் ஏற்கனவே கொரோனா அரக்கன் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மது அரக்கனும் களத்தில் குதித்து வீதிகளுக்கு வந்து சதிராட்டம் ஆடத் தொடங்கினால் அனைத்து தரப்பு மக்களின் நிலை என்னவாகும்? கொரோனாவிடமிருந்து அவர்களை யாரால் காப்பாற்ற முடியும்?
தமிழ்நாட்டில் ஏற்கனவே கொரோனா அரக்கன் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மது அரக்கனும் களத்தில் குதித்து வீதிகளுக்கு வந்து சதிராட்டம் ஆடத் தொடங்கினால் அனைத்து தரப்பு மக்களின் நிலை என்னவாகும்? கொரோனாவிடமிருந்து அவர்களை யாரால் காப்பாற்ற முடியும்?#PMKcallsShutTASMACever
— Dr S RAMADOSS (@drramadoss) May 6, 2020
வாரக் கணக்கில் வறுமையின் உச்சத்தைத் தொட்டு வந்த நிலையில், போதையை மறந்து மக்கள் தெளிந்து வரும் நிலையில், தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறந்தால் ஏழைக் குடும்பங்களின் நிலை என்ன ஆகும்? குடும்பத் தலைவியின் தாலியும், தட்டுமுட்டு சாமான்களும் எங்கே போகும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வாரக் கணக்கில் வறுமையின் உச்சத்தை தொட்டு வந்த நிலையில், போதையை மறந்து மக்கள் தெளிந்து வரும் நிலையில், தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறந்தால் ஏழைக் குடும்பங்களின் நிலை என்ன ஆகும்? குடும்பத் தலைவியின் தாலியும், தட்டுமுட்டு சாமான்களும் எங்கே போகும்?#PMKcallsShutTASMACever pic.twitter.com/14nexJWbGb
— Dr S RAMADOSS (@drramadoss) May 6, 2020