கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

 

கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்து இருக்கிறது. டெல்லி மாநில அரசும் மத்திய அரசும் கொரோனாவை எதிர் கொள்ள என்ன ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றன

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்து இருக்கிறது. டெல்லி மாநில அரசும் மத்திய அரசும் கொரோனாவை எதிர் கொள்ள என்ன ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றன என்று நேற்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. அதனால்,கேரளத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் வரும் மார்ச் 31ம் தேதிவரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திருக்கிறது டெல்லி மாநில அரசு.அத்துடன் டெல்லியில் உள்ள அனைத்துத் திரை அரங்குகளையும் மார்ச் 31 வரை மூடும் படியும் கேஜ்ரிவால் உத்தரவிட்டு இருக்கிறார்.

pinarayi vijayan

இந்நிலையில் கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.