கேரளாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மொத்த பாதிப்பு 142 ஆக உயர்வு…

 

கேரளாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மொத்த பாதிப்பு 142 ஆக உயர்வு…

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் செவ்வாய்கிழமையான இன்று கண்ணூர் 5, மலப்புரம் 3, பத்தனம்திட்டா, ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு தலா ஒருவர் என 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் செவ்வாய்கிழமையான இன்று கண்ணூர் 5, மலப்புரம் 3, பத்தனம்திட்டா, ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு தலா ஒருவர் என 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் வெளி நாடுகளில் இருந்தும் 6 பேர் ,மகாராஷ்ட்டிராவில் இருந்தும், குஜராத், தமிழகத்தில் இருந்து தலா ஒருவர் வந்துள்ளனர். இன்று ஒருவரும் நோய் தொற்றில் இருந்து குணமாகவில்லை. 

coronavirus

இதையடுத்து கேரளாவில் கொரோனா பாதிப்பிற்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 130ல் இருந்து 142 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர் 642 பேர். இதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 497 பேர் குணமடைந்துள்ளனர்” எனக் கூறினார்.