கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகரை இயக்கும் மாதவன்!

 

கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகரை இயக்கும் மாதவன்!

நடிகர் மாதவன் கேம் ஆஃப் த்ரோன்ஸ் பட நடிகரைத் தனது ராக்கெட்ரி படத்தில் நடிக்கவைத்துள்ளார். 

சென்னை: நடிகர் மாதவன் கேம் ஆஃப் த்ரோன்ஸ் பட நடிகரைத் தனது ராக்கெட்ரி படத்தில் நடிக்கவைத்துள்ளார். 

நடிகர் மாதவன் தனது தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையைப் படமாக எடுத்து வருகிறார். கடந்த 1994ஆம் ஆண்டு பாதுகாப்பு ரகசியங்களை உளவு பார்த்ததாக மத்திய புலனாய்வுத் துறை தவறுதலாக நம்பி நாராயணையை கைது செய்தது. பின்னர் அவர் மீது எந்த தப்பு இல்லை என்று 1998ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இவரை விடுதலை செய்தது. அதோடு பொய்யான வழக்கைப் போட்டதால் கேரளா காவல்துறை நம்பி நாராயணனுக்கு ஐம்பது  லட்சம் ரூபாய் கொடுத்திருந்தது. 

அந்த சிறையில் அவருக்கு நடந்த கொடுமையை Ready to fire: How India and I survived the ISRO spy case’ என்று  நாராயணன் புத்தகமாக வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தைத் தழுவிய தற்போது இந்த படம் தயாராகி வருகிறது. இதை மாதவன் இயக்குவது மட்டுமின்றி மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார். மேலும் இதில் 17 ஆண்டுகள் கழித்து மாதவனுடன், சிம்ரனுடன் இணைந்து நடிக்கிறார்.

இந்த நிலையில் இந்தி, தமிழ், ஆங்கிலம் என்று மூன்று மொழிகளில் உருவாகி வரும் இதில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் நடித்த ரான் டொனச்சியும், டௌண்டன் அப்பே தொடரில் நடித்து பிரபலமான பிள்ளிஸ் லோகனும் இணைந்து நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

படப்பிடிப்பு சமயத்தில் இவர்கள் இருவருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாதவன், ‘ரான் டொனச்சியுடனும் பிள்ளிஸ் லோகனுடனும் ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தில் இணைந்து பணியாற்றுவது நல்ல அனுபவமாகவும் கௌரவமாகவும் உள்ளது. மனதின் ஆழத்திலிருந்து நன்றி சொல்லிக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.