கேப்டனின் மகன், சூப்பர் ஸ்டார் ரசிகர் என்பது உங்களுக்கு தெரியுமா!அவரே கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்!?
ரஜினி அங்கிள் என்னிடம் சொன்ன தருணம் வாழ்க்கையில் சிறப்பான ஒன்று’ என்று பதிவு செய்திருப்பது இரண்டு தரப்பு ரசிகர்களிடமும் பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறது
கேப்டனின் அரசியல் வாரிசு விஜய பிரபாகரன் இன்று தனது இன்ஸ்டாகிராமில் விஜயகாந்த்-ரஜினிகாந்த் இருவரும் சந்தித்துப் பேசும் புகைப்படத்தைப் போட்டு ‘நான் அரசியல் மேடையில் பேசுவதைப் பார்த்ததாக ரஜினி அங்கிள் என்னிடம் சொன்ன தருணம் வாழ்க்கையில் சிறப்பான ஒன்று’ என்று பதிவு செய்திருப்பது இரண்டு தரப்பு ரசிகர்களிடமும் பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறது.
கேப்டன் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்தபோதே ஆர்ப்பாட்டம் இல்லாமல் தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருந்தார் அவரது வாரிசு விஜய பிரபாகரன். போகும் இடங்களில் வயசுக்கு ஏற்ற மாதிரி சில வார்த்தைகளை விட்டாலும் அவரது பேச்சில் அப்பாவைப் போலவே அதிரடி காட்டுகிறார்!
விஜய பிரபாகரின் அதிரடி பேச்சுக்கு கிளிக் செய்ய: https://www.toptamilnews.com/vijayakanth-son-bold-speech-about-lok-sabha-election-alliance
அதிலும் நேற்று டெல்டா மாவட்டத்தில் நடந்த மீட்டிங்கில் பேசும்போது, விஜயகாந்த் எப்போதும் சிங்கம் போலதான் வருவார். ஆனால், பன்றிகள்தான் கூட்டமாக வரும்; அதுபோல தான் சிலர் இருக்கிறார்கள். அவர் குறிப்பிட்டு சொன்ன டயலாக் ‘சிவாஜி’படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசிய டயலாக்கின் இன்னொரு வெர்சன் தான்.
விஜய பிரபாகரன் தீவிர ரஜினி ரசிகர்.அதனால்தான் அந்த டயலாக் அவரையும் அறியாமல் அவரது பேச்சுக்கு நடுவே வந்திருக்கிறது. இன்ஸ்டாகிராம் பதிவின் முடிவில் ‘கண்டிப்பாக அங்கிள், இனியும் நான் நன்றாக வேலை செய்வேன்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அடுச்சு ஆடுங்க ப்ரோ!!