கேட்பாரற்று இறந்து கிடந்த பிரபல நடிகை: அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

 

கேட்பாரற்று இறந்து கிடந்த பிரபல நடிகை: அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

பிரபல நடிகையாக வலம் வந்த சிம்ரன் சிங் என்பவர், இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சாம்பல்பூர்: பிரபல நடிகையாக வலம் வந்த சிம்ரன் சிங் என்பவர், இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஒடிசா மாநிலத்தின் பிரபல நடிகயாக வலம் வந்தவர் சிம்ரன் சிங். செல்ஃபி பிபொ, ரிக்‌ஷாவாலா, ரிம்ஜிம், தில் கா ராசா போன்ற ஆல்பம் பாடல்களில் நடித்து பிரபலமடைந்தவர். 

death

இந்நிலையில், சாம்பலபூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மஹாநதி ஆற்றின் கரையில், தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்களுடன் சிம்ரன் சிங்கின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சிம்ரம் சிங்கின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.