கேட்டை நட்சத்திரகாரர்கள் குணாதிசயங்கள் மற்றும் வழிபட வேண்டிய கோயில்கள் 

 

கேட்டை நட்சத்திரகாரர்கள் குணாதிசயங்கள் மற்றும் வழிபட வேண்டிய கோயில்கள் 

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதற்கேற்ப வாழ்கையை முழு மன நிறைவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் கேட்டை நட்சத்திரக்காரர்களின் குணாதிசயங்கள் மற்றும் அவர்கள் வணங்க வேண்டிய கோயில்கள் பற்றி இந்த பதிவில் பார்போம்.

ஜோதிட சாஸ்திரம் வருங்காலத்தை உள்ளங்கை நெல்லிக்கனியென தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஓர் அற்புத சாஸ்திரம் ஆகும். ஒருவன் பிறந்த தருணத்தில் ஆட்சி செலுத்தும் கிரகங்கள் மற்றும் ராசிகள்,நட்சத்திரங்களின் அமைவுகளை அடிப்படையாகக் கொண்டு, மகான்களால் எழுதிவைக்கப்பட்ட ஜோதிட சாஸ்திரம், அவனுக்கான வருங்கால பலன்களை வரையறுத்துவிடும்.

kettai

இயற்கையின் ஆற்றலை நம்மிடம் திணிப்பது கிரகங்களும், ராசி நட்சத்திரங்களும்தான். நட்சத்திரக் கதிர்வீச்சுகள் அதற்குரிய தன்மையோடு பூமியை அடைய, அவற்றுடன் கிரகங்களின் கதிர்வீச்சும் இணைந்து ரசவாத மாற்றத்தை நிகழ்த்துகின்றன. 

அதற்கு ஆட்படும் மனிதனானவன் தனது பூர்வஜன்ம வினைகளுக்கு ஏற்ப பலனையோ, பாதிப்பையோ ஏற்கிறான். அங்ஙனம் பாதிப்புகள் உண்டாகும்போது மனம் சோர்வுறாமல் வலிமை பெறவும், தாழ்வைக் கட்டுப்படுத்தவும், வாழ்வை மேம்படுத்தவும்  இறைவழிபாடு உதவும்.

kettai

புதனின் இரண்டாவது நட்சத்திரமாகத் திகழ்வது இந்தக் கேட்டை நட்சத்திரம் ஆகும்.வருங்காலத்தை உணர்பவராகவும் தான தருமங்கள் செய்பவராகவும் நட்பு வட்டம் அதிகமுள்ளவராகவும் விளங்குவார்கள் என்று பல்வேறு ஜோதிட நூல்கள் கூறுகிறது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யாருடைய உதவியும் இல்லாமல் சுயமுயற்சியால் எதிலும் முன்னேறுவார்கள்.நுண்ணறிவும் கல்வியும் பேச்சுத் திறனும் பெற்றிருப்பார்கள். மற்றவர்களின் மனநிலையை அறிந்து பேசும் திறமைசாலிகள் என்றும் நம் ஜோதிட கிரந்தங்கள் குறிப்பிடுகின்றன.

kettai2

கேட்டை நட்சத்திரகாரர்கள் திருவேற்காட்டில் வீற்றிருக்கும் கருமாரி அம்மனையும் மற்றும் சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமானையும் ,விராலிமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ முருகப்பெருமானையும் மற்றும் உறையூரில் அருள்பொழியும் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் உடனுறை ஸ்ரீ அழகியமணவாளப் பெருமாளை வழிபாடு செய்வது அவர்களது வாழ்வில் சகல செல்வங்களையும் தருகின்ற வழிபாடாக அமையும்.

கேட்டை நட்சத்திரக்காரர்கள் தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள பசுபதிகோயிலில் அருள்மிகு வரதராஜப்பெருமாளை வழிபாடு செய்வதும் மேன்மையான பலன்களை தரும் என்று பல்வேறு ஜோதிட கிரந்தங்களில் கூறியுள்ளனர்.