கென்யாவில் பள்ளிக்கூடத்தில் கூட்ட நெரிசல் – 14 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

 

கென்யாவில் பள்ளிக்கூடத்தில் கூட்ட நெரிசல் – 14 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

கென்யாவில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் படிக்கட்டில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 14 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நைரோபி: கென்யாவில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் படிக்கட்டில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 14 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கென்யா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ககமிகா நகரில் தொடக்க பள்ளி ஒன்று உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் மாணவர்கள் குறுகலான படிக்கட்டுகள் வழியாக வெளியேறி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு மாணவர்கள் இடையே கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அப்போது மாணவர்கள் பலர் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இந்த சம்பவத்தில் சிலர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

இதனால் 14 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் இடையே எதனால் கூட்டநெரிசல் ஏற்பட்டது, அனைவரும் ஏன் ஓடினர் என்று பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கென்யாவில் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதாகவும், அங்கு பள்ளிகளின் பாதுகாப்புத் தன்மை கேள்விக் குறியாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.