‘கெத்து’ காட்ட வாளால் கேக் வெட்டிய நடிகர்…வழக்குப்பதிவு செய்த போலீசார்!
அப்போது தனது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் சேர்ந்து வாளால் கேக்கை வெட்டி கொண்டாடியுள்ளார்.
சமீபகாலமாகப் பிறந்தநாள் கேக் வெட்ட அரிவாள், வாள் போன்றவற்றைப் பயன்படுத்தும் நடைமுறை சிலரிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரவுடி பினு கைது செய்யப்பட்டார். அதேபோல் கல்லூரி மாணவர்கள் சிலரும் கெத்துக்காக செய்கிறோம் என்று போலீசில் வசமாக சிக்கி கொண்டு தவிக்கின்றனர்.
அந்த வரிசையில் நடிகர் ஒருவரும் இணைந்துள்ளார். கன்னட நடிகர் துனியா விஜய். இவர் கடந்த 19 ஆம் தேதி தனது 46 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது தனது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் சேர்ந்து வாளால் கேக்கை வெட்டி கொண்டாடியுள்ளார். இதற்கான புகைப்படங்கள், விடீயோக்கள் இணையத்தில் வைரலானது.
அதே சமயம் துனியா விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு எந்த அனுமதியும் பெறாமல் அந்த பகுதியில் பந்தல் போட்டு ரசிகர்களை கூட்டியுள்ளார். இதனால் இடையூறு ஏற்படுத்தியதாக துனியா விஜய் மீது போலீஸ் ஆணையரிடம் புகாரளிக்கப்பட்டிருந்தது. இதனால் பிறந்தநாள் கேக் வெட்டவாளை பயன்படுத்தியது ஏன் என்று விளக்கம் கேட்டு துனியா விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பினர். இதன் காரணமாக கிரிநகர் போலீஸ் நிலையத்தில் துனியா விஜய் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, வாளை கொண்டு பயன்படுத்தி கேக் வெட்டிய விவகாரம் காரணமாக கிரிநகர் போலீசார் துனியா விஜய் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.