கெட்டுப்போன ஆவின் பால் பாக்கெட் விற்பனை செய்ய முயன்ற விற்பனை பிரதிநிதிக்கு நேர்ந்த கதி..!?

 

கெட்டுப்போன ஆவின் பால் பாக்கெட் விற்பனை செய்ய முயன்ற விற்பனை பிரதிநிதிக்கு நேர்ந்த கதி..!?

எதேர்ச்சையாக, வாடிக்கையாளர்களில் ஒருவர் பதிவிட்டிருக்கும் தேதியை பார்த்தார். அப்போது அதில், நேற்றைய தேதி அச்சிடப்பட்டிருந்தது. 

புதுக்கோட்டையில் இருக்கும் ஆவின் பால் விற்பனை நிலையத்தில் வழக்கமாக பால் வாங்கும் வாடிக்கையாளர்கள் தியாகராஜன் மற்றும் வெங்கடேஷ் இருவரும் எப்போதும் போல இன்று காலை பால் பாக்கெட் வாங்கியுள்ளனர். எதேர்ச்சையாக, வாடிக்கையாளர்களில் ஒருவர் பதிவிட்டிருக்கும் தேதியை பார்த்தார். அப்போது அதில், நேற்றைய தேதி அச்சிடப்பட்டிருந்தது. 

Aavin milk

உடனே விற்பனையாளர் துளசிதாசனிடம், இது நேற்று பால் பாக்கெட் கெட்டுப் போகியிருக்கும் அதனால் வேறு பால் பாக்கெட் தருமாறு வாடிக்கையாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு, துளசிதாசன் வேறு பால் பாக்கெட் தர முடியாது என்று கூறியதும் இருவரிடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனைக் கண்ட பொதுமக்கள் நிறையப் பேர் ஆவின் வளாகத்தின் முன் கூடி கடையை முற்றுகையிட்டுள்ளனர்.

Aavin milk

தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட ஆவின் நிலைய அதிகாரி, வாடிக்கையாளர்களிடம் வேறு பால் பாக்கெட் தருவதாகக் கூறி சமாதானம் செய்து, கூட்டத்தைக் களையச் செய்துள்ளார். அதன் பின், வேறு பால் பாக்கெட் அளித்திருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்திருக்காது என்பதாலும் தேதியை கவனிக்காமல் நேற்றைய பாலை வாடிக்கையாளர்களுக்கு அளித்ததாலும் ஆவின் விற்பனையாளர் துளசி தாசனை மாவட்ட ஆவின் நிலைய அதிகாரி பணியிடை நீக்கம் செய்துள்ளார்.